Monday, December 31, 2012

கல்லூரி


ek; fy;Y}up
tho;f;ifapy;
rpupj;J tpisahba
ikjhdk;....

tFg;giw Rtupy;
tiue;j rpW
Xtpaq;fs;...

xd;whf cz;l
czTfs;
md;gha; gpbj;j
rz;ilfs;

gbj;J kwe;J Nghfapy;
ghrkha; kPl;bj;je;j
Mrpupah;fs;.

fy;Y}up cDk;
rhk;uh[;[paj;jpy;
gwitfs; Nghy;
ghb jpupe;NjhNk..

vj;jid vj;jid
,dpa gy
re;Njhrq;fs;

me;j gRikahd
ehl;fs; kPz;Lk;
tUkh.......?                      - Musathika




என் தோழி!





றியானாஹிப்

அன்னையவள் பாசத்தை
அன்று சுவைத்திருந்த எனக்கு
அன்பிலே உயர்ந்திட்ட உன் நட்பும்
அருகில் நான் சுவைத்திட்ட பாசம் தான்

நான்கு வயதில்
நான் யாரெண்டரியா வேளை
நான் நானாக உனைக்கண்டேன்
நான் கண்ட நாளில் நட்புக் கொண்டேன்

சுதந்திரமாய் நாம்
சுற்றிட்ட இளமை – எமை
சூழ்ந்திருக்கும் கவலைகளை இன்றும்
சுருட்டி எறிந்திடுமே..

வாழ்கையிலே நாம் வென்று
வாழ்வின் ஒருநாளில்
வாழ்ந்து காட்டுவோமடி – என்றும்
வாழ்வில் அழியாதது நம் நட்பே


உனக்காய் ஆயிரம் உறவும்
எனக்காய் ஆயிரம் உறவும்
உண்மையாய் கிடைத்திடினும்
எம் நட்பே உயர் உறவுகள் நமக்கு..

என் வீட்டில் உன் மனமும்
உன் வீட்டில் என் மனமும்
எதிர் செல்லும் அலையாகும்
உருண்டோடும் அருவியாகும்..

காதலரை விட நாம்
ஐக்கியமாய் வாழ்ந்திருப்போம்..
உனக்காய் ஒருத்தனும்
எனக்காய் ஒருத்தனும் துணையாய் வரும்வரையில்..

நம் நட்பை புரிந்திட்ட
நம் நட்பை தெரிந்திட்ட
நமக்கே உரித்தான – ஒரு
நல்லிதயம் கிடைத்திடுமா??

ஏக்கமாய் உன் விழி
கண்டு கேட்கேன் நான்..
கிடைக்கும் என கண்சிமிட்ட
உன் நெஞ்சில் சாய்ந்திட வினைகிறேன்...

அல்குர்ஆன்





எம். மக்பூன் றியாப்

நம் வீட்டில் தூசுபடியும் 
பள்ளி நூலா இக்குர்ஆன்?
மருந்துக்கு தாயத்து மட்டும் கட்டும் 
மந்திர நூலா இக்குர்ஆன்?
ரமழானில் மட்டும் என மட்டுப்படுத்தி
வந்திறங்கிய நூலா இக்குர்ஆன்?
நான் அறிந்ததை உமக்குறைக்கேன்
இதைக் கொஞ்சம் கேளீர்...

எமை வழிகாட்ட வல்லோன் அளித்திட்ட
அருள் மறை தான் இக்குர்ஆன்
அல்லாஹ்வின் மார்க்கமாம் இவ்விஸ்லாத்தை
பாரினிலே விதைத்திடவே வந்ததுவும் இக்குர்ஆன்
அறியாமை மாந்தர்களை அவ்வுலகில் - அறிவுள்ளோர் 
ஆக்கியதும் இக்குர்ஆன்
கண்மணியாம் பெருமபனை ஹிராவில் வந்தடைந்த 
சுடர் தீபம் தான் இக்குர்ஆன்


மன்னிக்க முடியாத பாவத்தை புரிந்தோரை – பார்போற்றும்
மாந்தர்களாய் வார்த்தெடுத்ததும் இக்குர்ஆன்
பெண்ணினம் தலைதூக்க வழிகாட்டிய 
புண்ணிய வேதம் இக்குர்ஆன்
ஒழுக்கத்தின் உயர்வுதனை எமக்கு கற்பித்த 
ஆசான் தான் இக்குர்ஆன்
பண்பாட்டு விழுமியங்களை பக்குவமாய்
எமக்குறைத்ததும் இக்குர்ஆன்

பெண்ணினம் தலைதூக்க வழிகாட்டிய 
புண்ணிய வேதம் இக்குர்ஆன்
சாவுதான் முடிவென்றிருந்தோரை மருத்துவம்
கொடுத்து உயிர்ப்பித்ததுவும் இக்குர்ஆன்
வானுயர்ந்த கட்டடங்கள் இம்மண்ணில்
தலைதூக்க வித்திட்டதும் இக்குர்ஆன்
வானியலின் எட்டாத எல்லைவரை எமை 
தூக்கிச் சென்றதும் இக்குர்ஆன்

புவியியலின் விளக்கமதை எடுத்து
இயம்பியதும் இக்குர்ஆன்
இயற்கையின் அற்புதத்தை எமக்கு சொல்லி
தந்ததுவும் இக்குர்ஆன்
இருளுக்குள் இருந்த ஐரோப்பாவை
ஒளிபெறச் செய்ததும் இக்குர்ஆன்
எத்துறையிலும்; சாதித்திட வல்லோன் தந்த
மூஸா நபியின் ஆஸாக் கோல் போன்றதுவே இக்குர்ஆன்....

சிறுமி நான் தவறிழைத்தின் எனை
மன்னிக்க மன்றாடுகிறேன்... இல்லை
எம்குர்ஆனை போற்றி நம் வாழ்வில் அதை
எடுத்து நடக்க ஏவுகிறேன்..
வஸ்ஸலாம்

இலட்சியப் பெண்





மக்பூன் றியாப்

இலட்சியப் பெண்ணாய் திகழ்ந்திட
ஆசை கொண்டாள் என் தங்கை
ஐரோப்ப மோகத்தை
தன் மனதில் கொண்டு
இந்திய அழகிகளை தன்
கண்களில் கண்டு
உயிரோட்ட மார்க்கத்தில் - உயிரற்று
மாறிட்டால்
உனக்காய் பல பெண்கள்
வழிகளாய் வாழ்ந்தனரே..
எம் ரஸூலவரின் நுபுவத்தையேற்று
தன்னுடைமைகளை இறைவழியில்
அளித்தவரும் பெண் தான்..
நபிமொழியை மனம் ஏற்று
அதிகமாய் அறிவித்த அறிவின்வூற்றும்
ஒரு பெண் தான்..


உரிமைக்காய் நடந்த போர்களிலும்
வீரத்துக்காய் நடந்த போர்களிலும்
இஸ்லாத்தின் வாரிசை ஈன்றெடுத்து
வீரத்தாய்ப்பால் தனை ஊட்டி – வீரனாய்
அனுப்பி வைத்த பெறுமையைக்
கொண்டவலும் இலட்சியப் பெண் தான்..
அன்றைய தியாகம்..
அன்றைய உணர்வு..
அண்மையில் கண்டோம் இந்நூற்றாண்டின்
எம் இலட்சியப் பெண்களிலே..
காஸாவின் அடுப்புக்கள்
எரியாத வேலையிலும் - ஏவுகனை தயாரித்து
போராட பங்கு கொண்டால்..
தன் கற்பையும் தன் சொந்த பூமியையும்
இஸ்ரேல் வெறி நாயிடம் காக்க
பசியும் பட்டினியும் சூழ்கொண்ட வேளையிலும்
தூய தீனுக்காய் - தன் மகனை
போராட அனுப்பி வைத்தாள்.
பலஸ்தீனை படித்தவர்கள் புரிந்திடுவர்
அவ்விலட்சியப் பெண்ணின் வாழ்க்கை தனை..

எகிப்திலும் நாம் கண்ட
படிப்பினைகள் மறக்கலையே..
திருக்கலிமா நிலைபெறவே
சிறைவாசம் அனுபவித்த
ஆயிரம் ஸைனபுகள் அங்குண்டு..
கொடுங்கோலன் நாசரினை நிலைகுலைய
செய்ததிலும் - பொரம் போக்கன்
முபாரக்கினை ஆட்சி கவிழ்த்ததிலும்
சரிபங்கு அவர்க்குண்டு
அவள் தான் எகிப்தின்
இலட்சியப் பெண்..
படிக்கையிலே நீரும் அவள்
வாழ்க்கை அறிந்திடுவீர்..

எம் பெண் கற்புக்காய் காஷ்மீரில்
அலையும் நாய்களை நாள்தோறும்
எதிர்த்து மானம் காக்கும்
ஓர் பிஞ்சிப் பெண்ணும் இலட்சியப் பெண்தான்..
ஈராக்கின் ஆக்கிரமிப்பில்
தன் மானம் காக்க போராடி
மடிந்தவளும் இலட்சியப் பெண்தான்..
ஆப்கானில் மதம் தலைக்கேறிய
காடயரிடம் மாட்டி தன் வாழ்வை
தொலைத்தவளும் கூட்டுப்படையின்
கூட்டு வல்லுறவால் - நிலைகுலைந்து
இரத்தப் பழி எடுத்த
வீர மங்கையரும்
இலட்சியப் பெண்தான்..

வீதியிலே பெண் சென்றிட
பயந்திடும் வேலையில்
இஸ்லாமிய அடையாளத்தில்
பட்டப் பின் படிப்பை
வெளிநாட்டில் கற்று வந்த எம்
இஸ்லாமிய சகோதரியும்
இலட்சியமானவள் தான்..
இபாதத்துடன் நின்று வீண் தர்க்கம்
புரியாமல்..
அல்லாஹ்வின் மார்க்கம்
உலகாள செய்திட வேண்டி
நல்லதொரு குடும்பத்தை
இத்தீனுக்காய் அமைத்திட
மனதில் உறுதி கொண்ட எல்லா
சகோதரியும்
ஓர் இலட்சியப் பெண்தான்..


தந்தை





என் தந்தை.... சொல் மிக்க

மந்திரமில்லை

என் தந்தை குணம் சிறக்க

இங்கே யாருமில்லை
தான் கற்றறிந்த ஞானத்தை
பண்புடனே பாரில் எத்தி வைப்பார்
கண்டவர்கள் கதை கேட்டு
ஓர் நாளும் தவராய் நடந்திரார்..
முதல் நாள் பள்ளி சென்ற
எனை முத்தமிட்டு அனுப்பி வைத்தார்
ஒவ்வோர் நாளுமெனை
பக்குவமாய் படிக்க வைத்தார்
வாழ்வின் படி நான் தாண்டையிலே
வாழ்த்தியெனை வளர்த்திட்டார்
வண்ண ஆடையையும்
வகை வகை உணவையும்
என் தந்தைவுறவையும்
எனக்காய் தூரம் வைத்தார்
தஹஜ்ஜத்தில் எழுந்தென்னை
பள்ளி செல்ல பழக்கித் தந்தார்
எல்லாத் தேவையையும் தொழுது
கேட்க சொல்லித் தந்தார்
பார்ப்போர் எனை நலதார் பேச
மார் தூக்கி நிமிர்ந்து நின்றார்
அல்லாஹ்வின் பாதையிலே
வீரமிக்க மகனாய் வளர்த்திட்டார்
அவர் மகனாய் எனை அழைக்கும்
பெருமைகளை சுமக்க வைத்தார்
ஈருலகை வென்றிட நான்
வழிகளையும் திறந்து வைத்தார்
நான் கண்ட வழியாய்
எனக்காய் வாழ்ந்திட்டார்..         

எம். மக்பூன் றியாப்