Blog Updates :
Home » » கவிதாபவனம் - ஒட்டகம்

கவிதாபவனம் - ஒட்டகம்

Written By Mohamed Imzan on Wednesday, August 21, 2013 | 7:33 PM

ஏக்கமோ....?

”மூதாதையர் உனக்கு -
உனக்கு பெற்று தந்த புண்ணியங்களை-
இன்று ஆகாய விமானம் தட்டிச்
சென்ற ஏக்கமோ.........?

-Rila, Kinniya


*********************
நன்றி..!

”படைத்தவனை நினைத்து
பார்வையை உயா்த்தி
பணிவுடன் நன்றி 
செலுத்தும்
பாலைவனக் 
கப்பலின்
பண்பு மனிதனுக்கு இல்லையா...?
- Panadura Shakeel

*********************

நண்பனே உசார்..!

”எமக்கடியிலும் பெற்றோல்
இருக்கிறது  போல -
அதோ அமெரிக்கன் துரத்தில்
இருக்கிறான்.
- Anvas, Mathurankuli

*********************

ஓ..! ஒட்டகமே...

உன் கழுத்து
நீளம் தான் -
அதட்காக இன்னும்
நீட்டி வைத்து 
பார்க்கிறாய்.
சுடு தாங்க முடியவில்லை
என்றா...?
- Fawmiya, Puttalam

*********************

ஏங்குகிறது.....!

சூரியனின் வெப்பம்
குறையாதா?
எனக்கு 
அல்ல
என்னில் பயணம்
செய்யும் பாலாய்
போன மக்களுக்காய்....
- Amjath, Akurassa

*********************

நீர்
அற்ற
பாலைவனத்தில்
நீர் வேண்டி
இறைவனை நோக்குகிறாயோ...?
- ZamRiZ, Akurana

*********************

ஒதுங்கி வாழ்கிறாயோ....?

மானிட சூழலில்
மனிதனின் மடமை
அறிந்து - ஒதுங்கி
வாழும் ஒரு உன்னத 
படைப்பு
- Zahira

*********************

ஒற்றுமை...

மனிதா...!
பாலைவன வெப்பத்தில்
நடமாடும் ஒட்டகத்துக்கு
இருக்கும் ஒற்றுமை
கூட உனக்கு இல்லையா...?
- Hamaz, Colombo

*********************
உன் கழுத்து...

வான வேடிக்கை
பார்க்கும் ஒட்டகமே....
ஒற்றையடி பாதைக்கும்
பஞ்சம் வந்து
விட்டது...
உன் கழுத்தின்
நீளத்தைப் பார்த்து
- F. Nuha, Madawala

*********************

எதிர்பார்ப்பு

இன்றேனும்
பாலையில்
மழை வருமோ....
என்று பார்க்கிறாயா...??
நிச்சயம் வரும்
உன் போன்ற 
உயிருக்கு
உறுதி உடையவன்
அளிப்பான் உயர்-
மழையை..
- Raizana, Mutur

*********************

பாலைவனக்கப்பல்
எனப்படும்
நீ......
பறக்க முடியவில்லை
என்றா........?
வானத்தைப் பார்க்கிறாய்...
- Hafsa Haleel, Puttalam

*********************

இரட்சகனிடம்
மண்டியிடுகின்றாயா...?
ஏன்
இந்த தண்டனை
எனக்கு என எண்ணி............
- Melfha

*********************
பாலைவனத்தில் 
ஒரு பசுமையான
கவிதை எழுதச் சொன்னாய்...

ஏற்கனவே அங்கு
எழுதப்பட்டுவிட்டது
"ஒட்டகம்" என்று


Oddamavadi
Naleem Zain
Qatar.


Share this article :
2 Comments
Disqus
Fb Comments
Comments :

2 comments:

Unknown said...

பாலைவனத்தில்
ஒரு பசுமையான
கவிதை எழுதச் சொன்னாய்...

ஏற்கனவே அங்கு
எழுதப்பட்டுவிட்டது
"ஒட்டகம்" என்று

Oddamavadi
Naleem Zain
Qatar.

kavi1st said...

உங்களையும் இணைத்துள்ளோம்.. வருகைக்கு நன்றி தோழரே

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved
Template Design by Creating Website Published by Zanir Design